Pages

Monday, March 21, 2011

கோளறு பதிகம்.

கோளறு பதிகம்..

திருஞானசம்பந்தர், தமிழ்நாட்டில், சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என அழைக்கப்படும் அறுபத்து மூவருள் முதலாக வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார். இவர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில், சீர்காழி என்னும் ஊரில், பிராமணக் குடும்பத்திற் பிறந்தார். இவரது தந்தையார் சிவபாதவிருதயர், தாயார் இசைஞானியார்.
திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் பல சிவத்தலங்களுக்கும் ஒன்றாகவே சென்று பாடல்களால் இறைவனை அர்ச்சித்துள்ளனர். திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் திருமறைக்காடு (வேதாரண்யம்) என்கிற திருத்தலத்தில் இருந்தபோது மதுரையில் அரசாண்ட பாண்டிய மன்னன் சமணமதத்தில் பற்றுக் கொண்டிருந்தான். அவனுடைய மனைவி மங்கையர்க்கரசியோ சைவ மதத்தில் பற்றுக் கொண்டிருந்தார். பாண்டிய நாட்டில் சமண மதம் ஓங்குவதைத் தடுக்கும் பொருட்டு திருஞான சம்பந்தர் மதுரைக்கு எழுந்தருளி அங்கே சைவம் தழைக்க உதவ வேண்டும் என்கிற வேண்டுகோளுடன் அவருக்கு அழைப்பு விடுத்தார். அரசியாரின் அழைப்பினை மதுரை ஏவலர்கள் திருமறைக்காடு வந்து திருஞான சம்பந்தரிடம் தெரிவித்தனர். திருஞான சம்பந்தர் மதுரை செல்ல உடன்பட்டு திருநாவுக்கரசரிடம் விடைபெறச் சென்றார். திருநாவுக்கரசர், அந்தக் கணத்தில் கோள்களின் அமைப்பும் அன்றைய நாளும் தீமை பயக்கும் அறிகுறிகள் காட்டுவதாகக் கூறி சம்பந்தரின் பயணத்தை ஒத்திப்போடச் சொன்னார்.

“சிவனடியையே சிந்திக்கும் சிவனடியார்களை நாளும் கோளும் என்ன செய்து விடும்? அவை நன்மையே பயக்கும்” என்று கூறி பத்து பாடல்கள் பாடினார் திருஞான சம்பந்தர். அந்தப் பாடல்களின் தொகுப்பான பதிகமே (பத்து பாடல்களின் தொகுப்புக்குப் பதிகம் என்று பெயர்) கோளறு பதிகம் எனப் பெயர் பெற்றது. (பதிகப்பயனுடன் சேர்த்து மொத்தம் பதினொரு பாடல்கள்)

கிரகங்கள் அவற்றின் பெயர்ச்சிகள் என்கிற பெயரால் பல்வேறு நம்பிக்கைகளில் தம்மை இழக்கும் மக்கள், இந்தப் பதிகத்தைப் படித்தால் கோள்கள் எந்த நேரத்திலும் நன்மையே பயக்கும் என்பது சைவ சமயத்தாருக்கு ஞான சம்பந்தரால் சொல்லப்பட்டிருக்கும் செய்தி. இன்றும் ஏதாவது முக்கிய காரியமாகக் கிளம்பும் போதும், சகுனம் சரியில்லாத போதும், நல்லபடியாக முடிய வேண்டும் என்கிற வேண்டுகோளுடன் இந்தப் பதிகத்தை முழுதாகவோ முதல் பாடலை மட்டுமோ அவசரமாக முணுமுணுத்து விட்டுச் செல்லும் வழக்கம் பலரிடம் உண்டு. ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் கோளறு பதிகத்தினை பாராயணம் செய்து வரவும்। (விக்கிப்பீடியாவில் இருந்து)

a 10-stanza poem from Thevaram by Thirugnanasambar to ward of
all planetary afflictions. Recite on all Tuesdays and fridays.

"வேய் உறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி
சனி பாம்பிரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவை நல்ல நல்ல
அடியார‌ வர்க்கு மிகவே."

"என்பொடு கொம்பொடாமை இவை மார்பிலங்க
எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு ப‌தினெட்டொ டாறும்
உடனாய நாள்க ள‌வைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார‌வர்க்கு மிகவே. "

"உருவளர் பவளமேனி ஒளிநீ ற‌ணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருக‌லர் கொன்றைதிங்கள் முடிமேல‌ணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைய‌தூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே. "

"மதிநுதன் மங்கையோடு வடவா லிருந்து
மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர்
கொடுநோய்களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"நஞ்ச‌ணி கண்டனெந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்
மிகையான பூதம‌வையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"வாள்வரி அதளதாடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடும் உடனாய்
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோள‌ரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆள‌ரி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"செப்பிள முலைநன்மங்கை ஒருபாகமாக
விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாத மிகையான‌ பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"வேள்பட விழிசெய்தென்று விடைமேலிருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த வத‌னால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன் ற‌னோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"கொத்தல‌ர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும்நாக முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொ ட‌மணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"தேனமர் பொழில்கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர் செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆன சொல்மாலை யோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே."

கோளறு பதிகம் - வேய்உறு தோளிபங்கன் YouTube

ஆறுமுக நாவலரின் சைவ வினா விடை 2



ரிஷபாருடர்

திருச்சிற்றம்பலம்

9.சிவலிங்கவியல்

199. சிவபெருமானை ஆன்மாக்கள் வழிபடும் இடங்கள் எவை?

சிவபெருமான், புறத்தே சிவலிங்கம் முதலிய திருமேனிகளும் குருவுஞ் சங்கமமும் ஆதாரமாகக் கொண்டு நின்றும், அகத்தே உயிர் இடமாகக் கொண்டு நின்றும், ஆன்மாக்கள் செய்யும் வழிபாட்டைக் கொண்டருளுவர். ஆதலால், ஆன்மாக்கள் அவரை வழிபடும் இடங்கள் இவைகளேயாம். சிவத்துக்குப் பெயராகிய இலிங்கம் என்னும் பதம், உபசாரத்தால், அச்சிவம் விளங்கப் பெறும் ஆதாரமாகிய சைல முதலியவற்றிற்கும் வழங்கும். [சைலம்=சிலையாலாகியது]

200. சிவபெருமான் இவ்விடங்களில் நிற்பர் என்றது அவர், எங்கும் வியாபகர் என்றதனோடு மாறுபடுமன்றோ?

மாறுபடாது; சிவபெருமான், எங்கும் வியாபகமாய் நிற்பினும், இவ்விடங்களில் மாத்திரமே தயிரில் நெய் போல விளங்கி நிற்பர்; மற்றை இடங்களிலெல்லாம் பாலில் நெய் போல வெளிப்படாது நிற்பர்.

201. சிவலிங்கம் எத்தனை வகைப்படும்?

பரார்த்த லிங்கம், இட்ட லிங்கம் இருவகைப்படும்.

202. பரார்த்த லிங்கமாவது யாது?

சிவபெருமான் சங்கார காலம் வரையுஞ் சாந்நித்தியராய் இருந்து ஆன்மாக்களுக்கு அநுக்கிரக்கப் பெறும் இலிங்கமாம். இது, தாவரலிங்கம் எனவும் பெயர் பெறும். சாந்நித்யம்=அண்மை, அடுத்தல், வெளிப்படுத்தல், தாவரம் எனினும், திரம் எனினும், நிலையியற் பொருள் எனினும் பொருந்தும்.

203. பரார்த்த லிங்கம் எத்தனை வகைப்படும்?

சுயம்பு லிங்கம், காண லிங்கம், தைவிக லிங்கம், ஆரிட லிங்கம், மானுட லிங்கம் என ஐவகைப்படும். இவைகளுள்ளே, சுயம்பு லிங்கமாவது தானே தோன்றியது. காண லிங்கமாவது விநாயகர், சுப்பிரமணியர் முதலிய கணர்களாலே தாபிக்கப்பட்டது. தைவிக லிங்கமாவது விட்டுணு முதலிய தேவர்களாலே தாபிக்கப்பட்டது. ஆரிட லிங்கமாவது இருடிகளாற் றாபிக்கப்பட்டது. அசுரர், இராக்கதர் முதலாயினாற் றாபிக்கப்பட்டதும் அது. மானுடலிங்கமாவது மனிதராற் றாபிக்கப்பட்டது.

204. இவ்வைவகை யிலிங்கங்களும் ஏற்றக்குறைவு உடையனவா?

ஆம்; மானுட லிங்கத்தின் உயர்ந்தது ஆரிட லிங்கம்; அதனின் உயர்ந்தது தைவிக லிங்கம்; அதனின் உயர்ந்தது காணலிங்கம்; அதனின் உயர்ந்தது சுயம்பு லிங்கம்.

205. பரார்த்த லிங்கப் பிரதிட்டை, பரார்த்த பூஜை, உற்சவம் முதலியவை செய்தற்கு அதிகாரிகள் யாவர்?

ஆதிசைவர்களுக்குள்ளே, சமயதீ¨க்ஷ, விசேஷதீ¨க்ஷ, நிருவாணதீ¨க்ஷ, ஆசாரியாபி§க்ஷகம் என்னும் நான்கும் பெற்றவர்களாய்ச் சைவாகமங்களிலே மகாபாண்டித்திய முடையவர்களாய் உள்ளவர்கள்.

206. திருக்கோயிலுள் ளிருக்குஞ் சிவலிங்கம் முதலிய திருமேனிகள் எல்லாரலுமே வழிபடற் பாலானவா?

ஆம்; சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கும் மார்க்கத்தாராலும் வழிபடற் பாலனவேயாம்; ஆயினும், அவ்வழிபாடு அவரவர் கருத்து வகையால் வேறுபடும்; படவே, அவருக்குச் சிவபெருமான் அருள் செய்யும் முறைமையும் வேறுபடும்.

207. சிவலிங்கம் முதலிய திருமேனிகளைச் சரியையாளர்கள் எக்கருத்துப் பற்றி வழிபடுவார்கள்? அவர்களுக்குச் சிவபெருமான் எப்படி நின்று அருள் செய்வர்?

சரியையாளர்கள் பகுத்தறித லில்லாது சிவலிங்கம் முதலிய திருமேனியே சிவமெனக் கண்டு வழிபடுவர்கள்; அவர்களுக்குச் சிவபெருமான் அங்கே வெளிப்படாது நின்று அருள் செய்வர்.

208. கிரியையாளர்கள் எக்கருத்துப் பற்றி வழிபடுவார்கள்? அவர்களுக்குச் சிவபெருமான் எப்படி நின்று அருள் செய்வர்?

கிரியையாளர்கள் அருவப் பொருளாகிய சிவபிரான் ஈசானம் முதலிய மந்திரங்களினாலே சிவலிங்க முதலிய திருவுருக் கொண்டார் என்று தெளிந்து, மந்திர நியாசத்தினால் வழிபடுவர்கள்; அவர்களுக்குச் சிவபெருமான், கடைந்த பொழுது தோன்றும் அக்கினிபோல, அவ்வம் மந்திரங்களினாலும் அவ்வவர் விரும்பிய வடிவமாய், அவ்வத் திருமேனிகளில் அவ்வப்பொழுது தோன்றி நின்று, அருள் செய்வர்.

209. யோகிகள் எக்கருத்துப் பற்றி வழிபடுவார்கள்? அவர்களுக்குச் சிவபெருமான் எப்படி நின்று அருள் செய்வர்?

யோகிகள், யோகிகளுடைய இருதய மெங்கும் இருக்குஞ் சிவபெருமான் இந்தத் திருமேனியிலும் இருந்து பூசை கொண்டருளுவர் என்று தெளிந்து, சாத்திய மந்திரங்களினால் வழிபடுவார்கள்; அவர்களுக்குச் சிவபெருமான், கறந்த பொழுது தோன்றும் பால் போல, அவ்வம் மந்திரங்களினால் அவ்வவர் விரும்பிய வடிவமாய், அவ்வத் திருமேனிகளில் அவ்வப்பொழுது தோன்றி நின்று அருள் செய்வர்.

210. ஞானிகள் எக்கருத்துப் பற்றி வழிபடுவார்கள்/ அவர்களுக்குச் சிவபெருமான் எப்படி நின்று அருள் செய்வர்?

ஞானிகள் மேலே சொல்லப்பட்ட முத்திறத்தாரும் போல ஓரிடமாகக் குறியாது, அன்பு மாத்திரத்தால் அங்கே வழிபடுவார்கள். அவர்களுக்குச் சிவபெருமான், கன்றை நினைந்த தலையீற்றுப் பசுவின் முலைப்பால் போலக், கருணை மிகுதியினால் அவ்வன்பே தாமாகி, எப்பொழுதும் வெளிப்பட்டு நின்று அங்கே அருள் செய்வர்.

211. சிவபெருமானுடைய திருவுருவஞ் சிவசக்தி வடிவம் என்று முன் செல்லப்பட்ட தன்றோ: இங்கே அவர் திருவுருவம் மந்திர வடிவம் என்றது என்னை?

சிவபெருமானுக்கு வாச்சிய மந்திரமாகிய சிவசத்தியே உண்மை வடிவம்; அச்சிவசத்தி, கரியினிடத்தே அக்கினி போல வாசக மந்திரத்தினிடத்தே நின்று சாதகருக்குப் பயன் கொடுக்கும். ஆதலினாலே, சிவபெருமானுக்குச், சிவசத்தியினால், வாசக மந்திரத்தோடு சம்பந்தம் உண்டு. அச்சம்பந்தம் பற்றி வாசக மந்திரஞ் சிவபெருமானுக்கு உபசார வடிவமாம்.

212. மந்திரநியாசம் என்றது என்ன?

வாச்சிய மந்திரங்களாகிய சிவசக்தி பேதங்களை உள்ளத்தில் சிந்தித்து, அவைகளை அறிவிக்கும் வாசக மந்திரங்களை உபசரித்துச், சிவபெருமானுக்கு உபசார வடிவத்தை அம்மந்திரங்களினாலே சிர முதலாக அமைத்தலாம். [நியசித்தல்=வைத்தல், பதித்தல்]

213. இட்டலிங்கமாவது யாது?

ஆசாரியர் விஷேதீ¨க்ஷயைப் பண்ணி, சீடனைப் பார்த்து, "நீ உள்ளளவுங் கைவிடாது இவரை நாடோறும் பூசி" என்று அநுமதி செய்து, "அடியேன் இச்சரீரம் உள்ளவரையுஞ் சிவபூசை செய்தன்றி ஒன்றும் உட்கொள்ளேன்" என்று பிரதிஞ்ஞை செய்வித்துக்கொண்டு கொடுக்க, அவன் வாங்கிப் பூசிக்கும் இலிங்கமாம். இது ஆன்மார்த்த லிங்கம் எனவும், சல லிங்கம் எனவும் பெயர் பெறும்.

214. இட்டலிங்கம் எத்தனை வகைப்படும்?

வாண லிங்கம், படிக லிங்கம், இரத்தின லிங்கம், லோகஜ லிங்கம், சைல லிங்கம், க்ஷணிக லிங்கம், எனப் பலவகைப்படும்.

215. இட்டலிங்கம் பூசைக்கு அதிகாரிகள் யாவர்?

பிராமணர் முதலிய நான்கு வருணத்தாரும் அநுலோமர் அறுவருமாகிய பத்துச் சாதியாருள்ளும், அங்ககீன ரல்லாதவர்கள் இட்டலிங்க பூசைக்கு அதிகாரிகள்; இவர்களுள்ளும், பிணியில்லாதவராய், இடம் பொருளேவல்கள் உடையவராய்ச், சிவபூசா விதி, பிராயச்சித்த விதி, மார்கழி மாதத்துக் கிருதாபி§க்ஷகம் முதலாகப் பன்னிரண்டு மாதமுஞ் செய்யப்படும் மாதபூசாவிதி, சாம்பவற்சரிகப் பிராயச் சித்தமாகச் சாத்தப்படும் பவித்தர விதி முதலியவைகளை நன்றாக அறிந்தவராய், அறிந்தபடியே அநுட்டிக்க வல்லவராய் உள்ளவர் மாத்திரமே, வாண முதலிய சிவலிங்கப் பிரதிட்டை செய்வித்துக் கொண்டு பூசை பண்ணலாம். மற்றவரெல்லாரும் க்ஷணிக லிங்க பூசையே பண்ணக் கடவர். அவர் குளிக்கப் புகுந்து சேறு பூசிக்கொள்வது போலச் சிவலிங்கப் பிரதிட்டை செய்வித்துக் கொள்ளப் புகுந்து பாவந் தேடிக்கொள்வது புத்தி யன்று.

216. எவ்வகைப்பட்ட சிவலிங்கம் பிரதிட்டை செய்வித்துக் கொள்ளல் வேண்டும்?

சிவாகம விதிவிலக்குகளை ஆராய்ந்து, சிவலிங்கங்களைப் பரீ¨க்ஷ செய்து, யாதொரு குற்றமும் இல்லாததாய் நல்லிலக்கணங்கள் அமையப்பெற்றதாய் உள்ள சிவலிங்கத்தையே பிரதிட்டை செய்வித்துக் கொள்ளல் வேண்டும்.

217. க்ஷணிக லிங்கமாவது யாது?

பூசித்தவுடன் விடப்படும் இலிங்கமாம்.

218. க்ஷணிக லிங்கம் எத்தனை வகைப்படும்?

மண், அரிசி, அன்னம், ஆற்றுமணல், கோமயம், வெண்ணெய், உருத்திராக்ஷம், சந்தனம், கூர்ச்சம், புஷ்பமாலை, சருக்கரை, மா எனப் பன்னிரண்டு வகைப்படும்.

219. மேலே சொல்லப்பட்ட பத்துச் சாதியாருள் அங்ககீனரும் மற்றைச் சாதியாருஞ் சிவபூசை பண்ண லாகாதா?

தங்கள் தங்கள் அதிகாரத்திற் கேற்ப ஆசாரியர் பண்ணிய தீ¨க்ஷயைப் பெற்றுத் தூல லிங்கமாகிய தூபியையேனுந் திருக்கோபுரத்தையேனும் பத்திர புஷ்பங்களால் அருச்சித்துத் தோத்திரஞ் செய்து நமஸ்கரிப்பதே அவர்களுக்குச் சிவபூசை; சூரிய விம்பத்தின் நடுவே சதாசிவமூர்த்தி அநவரதமும் எழுந்தருளி யிருப்பர் என்று நினைந்து அவருக்கு எதிராகப் புட்பங்களைத் தூவித் தோத்திரஞ் செய்து நமஸ்கரிப்பதும் அவர்களுக்குச் சிவபூசை.

220. சிவபூசை எழுந்தருளப் பண்ணிக் கொண்டவர் பூசை பண்ணாது புசிக்கின் என்னை?

பூசை பண்ணாது புசிப்பது பெருங் கொடும் பாவம். அப்படிப் புசிக்கும் அன்னம் புழுவுக்கும், பிணத்துக்கும், மலத்துக்குஞ் சமம்; அப்படிப் புசித்தவனைத் தீண்டல் காண்டல்களும் பாவம். ஆதலால், ஒரோவிடத்துப் பூசை பண்ணாது புசித்தவன், ஆசாரியரை அடைந்து அதற்குப் பிராயச்சித்தஞ் செய்து கொள்ளல் வேண்டும்.

221. ஞானநிட்டை யுடைவர் சிவபூசை முதலிய நியமங்களைச் செய்யாது நீக்கிவிடலாமா?

நித்திரை செய்வோர் கையிற் பொருள் அவர் அறியாமற்றானே நீங்குதல் போல, ஞானநிட்டையுடையவருக்குச் சிவபூசை முதலிய நியமங்கள் தாமே நீங்கிற் குற்றமில்லை; அப்படி யன்றி அவர் தாமே அவைகளை நீக்குவாராயின், நரகத்து வீழ்தல் தப்பாது.

222. சிவபூசை எழுந்தருளப் பண்ணிக்கொண்டவர் சனன மரணா செளசங்களில் யாது செய்தல் வேண்டும்?

திடபத்தி யுடையவர் ஸ்நானஞ் செய்து, ஈர வஸ்திரத்தைத் தரித்துக்கொண்டு, தாமே சிவபூசை பண்ணலாம்; ஸ்நானஞ் செய்தமை முதற், பூசை முடிவுவரையுந் தாமரையிலையில் நீர் போல அவரை ஆசெளசஞ் சாராது. திடபத்தி யில்லாதவர், ஆசெளசம் நீங்கும் வரையும் தம்முடைய ஆசாரியரைக் கொண்டாயினும் தம்மோடு ஒத்தாரைக் கொண்டாயினும் தம்முடைய பூசையைச் செய்வித்துத், தாம் அந்தரியாகஞ் செய்துகொண்டு, அப்பூசை முடிவிலே புறமண்டபத்தி னின்று புட்பாஞ்சலித்திரயஞ் செய்து, நமஸ்காரம் பண்ணல் வேண்டும். (அந்தரியாகம்-உட்பூசை)

223. வியாதினாலே தங் கைகால்கள் தம் வசமாகாதிருப்பின் யாது செய்தல் வேண்டும்?

தம்முடைய ஆசாரியரைக் கொண்டாயினும் தம்மோடு ஒத்தாரைக் கொண்டாயினும் தம்முடைய பூசையைச் செய்வித்துத், தாம் அந்தரியாகஞ் செய்தல் வேண்டும்.

224. சிவபூசை யெழுந்தருளப் பண்ணிக்கொண்ட பெண்கள் பூப்பு வந்தபோது யாது செய்தல் வேண்டும்?

மூன்று நாளும் பிறர் தண்ணீர் தர ஸ்நானஞ் செய்து கொண்டு, அந்தரியாகஞ் செய்தல் வேண்டும்; நான்காம் நாள் ஸ்நானஞ் செய்து, பஞ்ச கவ்வியமேனும், பாலேனும் உட்கொண்டு; மீட்டும் ஸ்நானஞ் செய்து, சிவபூசை செய்தல் வேண்டும், அம்மூன்று நாளும் அந்தரியாகஞ் செய்யாதொழியின், அக்குற்றம் போம்படி அகோரத்தை ஆயிரம் உருச் செபித்தல் வேண்டும்.

225. பெண்கள், தாம் பிரசவித்த சூதகம் தமக்குரியார் இறந்த ஆசெளசம், வியாதி இவைகள் வரின், யாது செய்தல் வேண்டும்?

வருணத்தாலுந் தீ¨க்ஷயாலுந் தம்மோ டொத்தவரைக் கொண்டு பூசை செய்வித்தல் வேண்டும்.

226. ஆசெளசம், வியாதி முதலியவை வந்தபோது பிறரைக் கொண்டு பூசை செய்வித்தவர் யாவரும், ஆசெளச முதலியவை நீங்கிய பின் யாது செய்தல் வேண்டும்?

பிராயசித்தத்தின் பொருட்டு அகோரத்தை முந்நூறுருச் செபித்துத் தாம் பூசை செய்தல் வேண்டும்.

227. சிவலிங்க காணாவிடத்து யாது செய்தல் வேண்டும்?

அந்தரியாக பூசை செய்து, பால் பழம், முதலியவற்றை உண்டு, நாற்பது நாள் இருத்தல் வேண்டும் அவ்விலிங்கம் வாராதொழியின் வேறொருலிங்கத்தை ஆசாரியர் பிரதிட்டை செய்துதரக் கைக்கொண்டு, பூசை செய்தல் வேண்டும். அதன்பின் வந்ததாயின் அவ்விலிங்கத்தையும் விடாது பூசை செய்தல் வேண்டும்.

228. சிவலிங்கப் பெருமானுக்கு விசேஷபூசை செய்யத்தக்க காலங்கள் எவை?

பஞ்சாக்ஷரவியலிலே சொல்லப்பட்டவை முதலிய புண்ணிய காலங்களுஞ் சென்மத்திரயங்களுமாம். இன்னும் மார்கழி மாச முழுதினும் நாடோறும் நித்திய பூசையே யன்றி அதற்குமுன் உஷக்கால பூசையும் பண்ணல் வேண்டும். சிவராத்திரி தினத்திலே பகலில் நித்திய பூசையேயன்றி இராத்திரியில் நான்கு யாம பூசையும் பண்ணல் வேண்டும் (சென்மத்திரயங்களாவன; பிறந்த நக்ஷத்திரமும் அதற்குப் பத்தா நக்ஷத்திர்மும், அதற்குப் பத்தா நக்ஷத்திரமுமாம்.)

229. சென்மத்திரய பூசையால் வரும் விசேஷ பலம் என்னை?

சென்மத்திரயந்தோறும் சிவலிங்கப்பெருமானூக்குப் பதமந்திரங்கொண்டு பாலினாலும் சர்க்கரையினாலும் விசேஷமாக அபிஷேகஞ் செய்து, சுகந்தத் திரவியங்கள் கலந்த சந்தனக் குழம்பு சாத்திப் பாயச முதலியன நிவேதனஞ் செய்துகொண்டுவரின், உற்பாதங்களும், பயங்கரமாகிய கிரக பிடைகளும், சகல வியாதிகளும் நீங்கும்.


திருச்சிற்றம்பலம்




10. நித்தியகருமவியல்


230. நாடோறும் நியமமாக எந்த நேரத்திலே நித்திரை விட்டெழுதல் வேண்டும்?

சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன் நித்திரை விட்டெழுவது உத்தமம்; மூன்றேமுக்கால் நாழிகைக்கு முன் எழுவது மத்திமம்; உதயத்தில் எழுவது அதமம்.

சிவத்தியானாதி

231. நித்திரை விட்டெழுந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?

சலம் வாயிற்கொண்டு இடப்புறத்திலே கொப்பளித்து, முகத்தையுங் கை கால்களையுங் கழுவி, ஆசமனம் பண்ணி, வடக்கு முகமாகவேனும் கிழக்கு முகமாக வேனும் இருந்து, விபூதி தரித்துக் கொண்டு, குரு உபதேசித்த பிரகாரஞ் சிவபெருமானைத் தியானித்துச் சிவமூலமந்திரத்தை இயன்றமட்டுஞ் செபித்து, அருட்பாக்களினாலே உச்ச விசையோடு தோத்திரஞ் செய்தல் வேண்டும்.

232. சிவத்தியான முதலியவை செய்த பின் செய்யத் தக்கவை யாவை?

அவசியகருமம், செளசம், தந்ததாவனம், ஸ்நானம், சந்தியாவந்தனம், சிவபூசை, சிவாலய தரிசனம், சிவசாத்திர பாராயணம், தேவார திருவாசக பாராயணம், மத்தியான சந்தியாவந்தனம், போசனம், சிவசாத்திர படனம், சாயங்கால சந்தியாவந்தனம், சிவாலய தரிசனம், சிவபுராண சிரவணம், சயனம் என்பவைகளாம்.

அவசிய கருமம்

233. மலசலமோசனஞ் செய்யத் தக்க இடம் யாது?

திருக்கோயிலெல்லைக்கு நானூறு முழ தூரத்தின தாய் ஈசானதிக்கொழிந்த திக்கினிடத்ததாய் உள்ள தனியிடமாம்.

234. மலசலமோசனஞ் செய்யத் தகாத இடங்கள் எவை?

வழி, குழி, நீர்நிலை, நீர்க்கரை, கோமயம் உள்ள இடம், சாம்பர் உள்ள இடம், சுடுகாடு, பூந்தோட்டம், மரநிழல், உழுத நிலம், அறுகம்புல்லுள்ள பூமி, பசுமந்தை நிற்கும் இடம், இடி வீழிடம், காற்றுச் சுழலிடம், புற்று, அருவி பாயும் இடம், மலை என்பவைகளாம்.

235. மலசலமோசனம் எப்படிச் செய்தல் வேண்டும்?

மெளனம் பொருந்திப், பூணூலை வலக்காதிலே சேர்த்துத் தலையையும், காதுகளையும் வஸ்திரத்தினாலே சுற்றிப், பகலிலும் இரண்டு சந்தியா காலங்களிலும் வடக்கு முகமாகவும், இரவிலே தெற்கு முகமாகவும், நாசி நுனியைப் பார்த்துக் கொண்டிருந்து, மலசல மோசித்தல் வேண்டும். சந்தியாகாலம் இரண்டாவன; இராக்காலத்தின் இறுதிமுகூர்த்தமும், பகற் காலத்தின் இறுதி முகூர்த்தமுமாம். (முகூர்த்தம் - இரண்டு நாழிகை)

செளசம்

236. மலசல மோசனஞ் செய்யின் எப்படிச் செளசஞ் செய்தல் வேண்டும்?

எழுந்து புண்ணிய தீர்த்த மல்லாத சலக்கரையை அடைந்து, சலத்துக்கு ஒரு சாணுக்கு இப்பால் இருந்து கொண்டு, மூன்று விரலால் அள்ளிய மண்ணுஞ்சலமுங் கொண்டு இடக்கையினாலே குறியை ஒருதரமும், குதத்தை ஐந்து தரத்துக்கு மேலும், இடக்கையை இடையிடையே ஒவ்வொரு தரமும், பின்னும் இடக்கையைப் பத்து தரமும், இரண்டு கையையுஞ் சேர்த்து ஏழு தரமுஞ் சுத்தி செய்து, சகனத்தைத் துடைத்து; கால்களை முழங்கால் வரையுங் கைகளை முழங்கை வரையும் ஒவ்வொரு தரமுங் கழுவிச் சுத்தி செய்து, செளசஞ் செய்த இடத்தைச் சலத்தினால் அலம்பிவிட்டு, அவ்விடத்தினின்று நீங்கி, வேறொரு துறையிலே போய், வாயையும் கண்களையும் நாசியையுங் காதுகளையுங் கைகால்களிலுள்ள நகங்களையுஞ் சுத்தி செய்து, எட்டுத்தரஞ் சலம் வாயிற் கொண்டு, இடப் புறத்திலே கொப்பளித்துத், தலைக்கட்டு இல்லாமற் பூணூலை முன்போலத் தரித்துக், குடுமியை முடித்து, மந்திரங்கள் உச்சரியாது ஒரு தரமும் மந்திரங்கள் உச்சரித்து ஒரு தரமுமாக இரண்டு தரம் ஆசமனம் பண்ணல் வேண்டும். (ஆசமனம் - உறிஞ்சுதல்)

237. சலமோசனஞ் செய்யின் எப்படி செளசஞ் செய்தல் வேண்டும்?

மண்ணுஞ் சலமுங்கொண்டு, குறியை ஒரு தரமும், இடக்கையை ஐந்து தரமும், இரண்டு கையையுஞ் சேர்த்து மூன்று தரமும், இரண்டு கால்களையும் ஒவ்வொரு தரமுஞ் சுத்தி செய்து, நான்கு தரங் கொப்பளித்து, ஆசமனம் பண்ணல் வேண்டும்.

238. செளசத்துக்குச் சமீபத்திலே சலம் இல்லையாயின் யாது செய்தல் வேண்டும்?

பாத்திரத்திலே சலம் மொண்டு ஓரிடத்தில் வைத்துக் கொண்டு, மலசல மோசித்துச் செளசஞ் செய்துவிட்டுப், பாத்திரத்தைச் சுத்தி செய்து, சலம் மொண்டு, வாய் கொப்பளித்துக், கால் கழுவி, ஆசமனம் பண்ணல் வேண்டும். சல பாத்திரத்தைக் கையில் வைத்துக் கொண்டு சலமல விசர்க்கஞ் செய்யலாகாது. (விசர்க்கம் = கழித்தல்)

239. ஆசமனம் எப்படிச் செய்தல் வேண்டும்?

கிழக்கையேனும் வடக்கையேனும் நோக்கிக், குக்குடாசனமாக இருந்து, இரண்டு முழங்கால்களுக்கும் இடையே கைகளை வைத்துக்கொண்டு, வலக்கையை விரித்துப் பெருவிரலடியிற் சார்ந்த உழுந்தமிழ்ந்து சலத்தை ஆசமித்தல் வேண்டும்.

240. குக்குடாசனமாவது யாது?

இரண்டு பாதங்களையும் கீழே வைத்துக் குந்திக் கொண்டிருத்தல்.

241. தடாக முதலியவற்றில் எப்படி ஆசமனஞ் செய்தல் வேண்டும்?

முழங்காலளவினதாகிய சலத்திலே நின்று, இடக் கையினாலே சலத்தைத் தொட்டுக்கொண்டு, வலக்கையினாலே ஆசமனம் பண்ணல் வேண்டும். முழங்காலளவினதாகிய சலத்திற் குறைந்தால் கரையை அலம்பி, அதிலிருந்து கொண்டு ஆசமனம் பண்ணல் வேண்டும்.

தந்ததாவனம்

242. தந்த சுத்திக்குக் கருவியாவன யாவை?

விதிக்கப்பட்ட மரங்களின் கொம்பும் இலையுந் தூளுமாம்.

243. இல்வாழ்வானுக்கு விதிக்கப்பட்ட மரங்கள் எவை?

மருது, இத்தி, மா, தேக்கு, நாவல், மகிழ், ஆத்தி, கடம்பு, விளா, நாயுருவி, அசோகு, குருக்கத்தி, பூல், வேல், சம்பகம் என்பவைகளாம்.

244. துறவிக்கு விதிக்கப்பட்ட மரங்கள் எவை?

பெருவாகை, நொச்சி, பெருங்குமிழ், புன்கு கருங்காலி, ஆயில், மருது என்பவைகளாம்.

245. தந்த காட்டம் எப்படிப்பட்டதாய் இருத்தல் வேண்டும்?

நேரியதாய்த், தோலோடு பசப்புள்ளதாய்க், கணுவுந் துளையும் இடைமுறிதலும் இல்லாததாய், சிறுவிரற் பருமை யுடையதாய் இருத்தல் வேண்டும். இல்வாழ்வானுக்குப் பன்னிரண்டங்குல நீளமும், துறவிக்கு எட்டங்குல நீளமும், பெண்களுக்கு நாலங்குல நீளமுங் கொள்ளப்படும். (காட்டம் = குச்சி)

246. தந்த சுத்திக்குக் கருவி யாகாதன யாவை?

பட்டமரம், பாளை, வைக்கோல், கைவிரல், செங்கல், கரி, சாம்பல், மணல் என்பவைகளாம்.

247. தந்த சுத்தி எப்படிச் செய்தல் வேண்டும்?

விதிக்கப்பட்ட தந்த காட்டத்தையேனும், இலையையேனுஞ் சலத்தினாலே கழுவி, மெளனம் பொருந்திக், கிழக்கு நோக்கியேனுங் குக்குடாசனமாக இருந்துகொண்டு, பல்லின் புறத்தையும் உள்ளையுஞ் செவ்வையாகக் சுத்தி செய்து, ஒரு கழியை இரண்டாகப் பிளந்து, ஒவ்வொரு பிளப்பை மும்மூன்று தரம் உண்ணாவளவாக ஓட்டி, நாக்கை வழித்து, இடப்புறத்தில் எறிந்துவிட்டுச் சலம் வாயிற்கொண்டு, பன்னிரண்டு தரம் இடப்புறத்திலே கொப்பளித்து, முகத்தையுங் கைகால்களையுங் கழுவி ஆசமனம் பண்ணல் வேண்டும். நின்றுகொண்டாயினும் நடந்து கொண்டாயினும், போர்த்துக்கொண்டாயினும் தந்த சுத்தி பண்ணலாகாது.

ஸ்நானம்

248. ஸ்நானஞ் செய்யத் தக்க நீர்நிலைகள் யாவை?

நதி, நதிசங்கமம், ஓடை, குளம், கேணி, மடு முதலியவைகளாம். நதிசங்கமமாவது இரண்டு யாறுகள் சந்தித்த இடமாம்; யாறுங் கடலுங் கூடிய இடம் எனினும் அமையும்.

249. ஸ்நானஞ் செய்யுமுன் யாது செய்தல் வேண்டும்?

கெளபீனத்தைக் கசக்கிப், பிழிந்து, தரித்து, இரண்டு கைகளையுங் கழுவி வஸ்திரங்களைத் தோய்த்து, அலம்பித், தரித்து, உடம்பைச் சலத்தினாலே கழுவி செவ்வையாகத் தேய்த்துக் கொள்ளல் வேண்டும்.

250. ஸ்நானம் எப்படிச் செய்தல் வேண்டும்?

ஆசனம் பண்ணிச் சகளீகரணஞ் செய்து, கொப்பூ ழளவினதாகிய சலத்தில் இறங்கி, நதியிலேயாயின் அதற்கு எதிர்முகமாக நின்றும், குள முதலியவைகளிலாயிற் கிழக்கு முகமாகவேனும் வடக்குமுகமாகவேனும் நின்றும், இரண்டு காதுகளையும், இரண்டு பெருவிரல்களினாலும், இரண்டு கண்களையும் இரண்டு சுட்டுவிரல்களினாலும், இரண்டு நாசிகளையும் இரண்டு நடுவிரல்களினாலும் மூடிக்கொண்டு சிவபெருமானைச் சிந்தித்து ஸ்நானஞ் செய்ய வேண்டும். இப்படி மூடுவது சண்முகி முத்திரை எனப் பெயர் பெறும்.

251. இப்படி ஸ்நானஞ் செய்தவுடனே யாது செய்தல் வேண்டும்?

ஆசமனஞ் செய்துகொண்டு, கரையிலேறி, வஸ்திரங்களைப் பிழிந்து, தோய்த்துலர்ந்த வஸ்திரத்தினாலே தலையிலுள்ள ஈரத்தைத் துவட்டி, உடனே நெற்றியில் விபூதி தரித்து, உடம்பிலுள்ள ஈரத்தைத் துவட்டிக், குடுமியை முடித்து, ஈரக் கெளபீனத்தைக் களைந்து, உலர்ந்த கெளபீனத்தைத் தரித்து, இரண்டு கைகளையுங் கழுவிச், சுத்தமாய்க் கிழியாதனவாய் வெள்ளியனவாய் உலர்ந்தனவாய் உள்ள இரண்டு வஸ்திரந் தரித்துக் கொண்டு, ஈர வஸ்திரங்களையுங் கெளபீனத்தையும் உலரும்படி கொடியிலே போடல் வேண்டும். ஒரு கொடியிலே தானே தோய்த்த வஸ்திரமுந் தோயாத வஸ்திரமும் போடுதலும், ஒருவர் வஸ்திரம் போட்ட கொடியிலே மற்றொருவர் வஸ்திரம் போடுதலும் ஆகாவாம். நக்கினனாயேனும், கெளபீன மாத்திரமுடையனாயேனும், ஒரு வஸ்திரந் தரித்துக் கொண்டேனும், யாதொரு கமருமுஞ் செய்யலாகாது.

(நக்கம் - அம்மணம்)

252. குளிர்ந்த சலத்திலே ஸ்நானஞ் செய்ய மாட்டாத பிணியாளர் யாது செய்தல் வேண்டும்?

ஸ்நானஞ் செய்தவர் சுத்திசெய்யப்பட்ட தானத்திலே சுத்தி செய்யப்பட்ட பாத்திரத்தில் வைத்த வெந்நீரை ஒரு பாத்திரத்தில் விடவிட, அவர் எடுத்து ஸ்நானஞ் செய்து, தோய்த்துலர்ந்த வஸ்திரத்தினால் ஈரத்தைத் துவட்டி, உலர்ந்த வஸ்திரந் தரித்துப், பதினொரு மந்திரத்தை ஒருதரஞ் செபித்துக் கொண்டு, சந்தியாவந்தனம் முதலியன செய்யலாம்.

253. வியாதியினாலே ஸ்நானஞ் செய்ய மாட்டாதவர் யாது செய்தல் வேண்டும்?

கழுத்தின்கீழ், அரையின்கீழ், கால் என்னும் இவைகளுள் ஒன்றை, இயன்றபடி சலத்தினாலே கழுவிக் கொண்டு, கழுவாமல் எஞ்சிய உடம்பை ஈர வஸ்திரத்தினால் ஈரம் படும்படி துடைத்து, அவ்வீரத்தைத் துவட்டித் தோய்த் துலர்ந்த வஸ்திரந் தரித்துப் பதினொரு மந்திரத்தை ஒருதரஞ் செபித்துக் கொண்டு, சந்தியாவந்தனம் முதலியன செய்யலாம். இந்த ஸ்நானங் காபில ஸ்நானம் எனப் பெயர் பெறும்.

254. இராத்திரி ஸ்நானஞ் செய்யலாமா?

யாகம், சந்திரகிரகணம், சிவராத்திரி, மாசப் பிறப்பு, மகப்பேறு என்பவைகளின் மாத்திரம் இராத்திரி ஸ்நானஞ் செய்யலாம்.

255. நியமகாலத்திலன்றி, இன்னும் எவ்வெப்பொழுது ஸ்நானஞ் செய்வது ஆவசியகம்?

சண்டாளருடைய நிழல் படினும், இழிந்த சாதியாரும் புறச்சமயிகளும், வியாதியாளரும், சனன மரணா செளசமுடையவரும், நாய், கழுதை, பன்றி, கழுகு, கோழி முதலியவைகளும் தீண்டினும், எலும்பு, சீலை முதலியவற்றை மிதிக்கினும், க்ஷெளரஞ் செய்து கொள்ளினும், சுற்றத்தார் இறக்கக் கேட்கினும், துச்சொப்பனங் காணினும், பிணப் புகை படினும், சுடுகாட்டிற் போகினும், சர்த்தி செய்யினும் உடுத்த வஸ்திரத்துடனே ஸ்நானஞ் செய்வது ஆவசியகம்.

(சர்த்தி = வாந்தி)

256. தீண்டலினாலே எவ்வெப்பொழுது குற்றமில்லை?

சிவதரிசனத்திலும், திருவிழாவிலும், யாகத்திலும், விவாகத்திலும், தீர்த்த யாத்திரையிலும், வீடு அக்கினி பற்றி எரியுங் காலத்திலும், தேச கலகத்திலும், சன நெருக்கத் தீண்டலினாலே குற்றமில்லை.

257. ஸ்நானஞ் சரீர சுத்திக்கு மாத்திரந்தான் காரணமா?

சரீர சுத்திக்கு மாத்திரமின்றிச் சரீராரோக்கியத்துக்கும், சித்தசோபனத்துக்கும், ஒருப்பாட்டுக்கும், இந்திரிய வடக்கத்துக்கும், யோக்கியத்துவத்துக்குங் காரணமாம். விடியற்கால ஸ்நானத்தினாலே பசி உண்டாகும்; நோய் அணுகாது.

சந்தியாவந்தனம்

258. சந்தியாவந்தனம் எத்தனை?

பிராதக்காலசந்தி, மத்தியானசந்தி, சாயங்காலசந்தி, அர்த்தயாமசந்தி என நான்காம்.

259. இன்னார் இன்னாருக்கு இன்ன இன்ன சந்தியா வந்தனங்கள் உரியன என்னும் நியமம் உண்டோ?

சமயதீக்ஷிதருக்குப் பிராதக்காலசந்தி யொன்றே உரியது; விசேஷ தீக்ஷிதருக்குப் பிராதக்காலசந்தி, சாயங்காலசந்தி என்னும் இரண்டு சந்திகள் உரியன; நிருவாண தீக்ஷிதருக்குப் பிராதக்காலசந்தி, மத்தியானசந்தி, சாயங்காலசந்தி என்னும் மூன்று சந்திகள் உரியன; ஆசாரியருக்கு நான்கு சந்திகளும் உரியன. சமய தீக்ஷிதர், விசேஷ தீக்ஷிதர்கள் மூன்று சந்திகளுஞ் செய்யலாம் என்று சில ஆகமங்களில் விதிக்கப் பட்டிருக்கின்றது.

260. பிராதக் காலசந்தி எந்நேரத்திலே செய்தல் வேண்டும்?

நக்ஷத்திரங்கள் தோன்றும்போது செய்தல் உத்தமம்; நக்ஷத்திரங்கள் மறைந்தபோது செய்தல் மத்திமம்; சூரியன் பாதி உதிக்கும்போது செய்தல் அதமம்.

261. மத்தியானசந்தி எந்நேரத்திலே செய்தல் வேண்டும்?

பதினைந்தாம் நாழிகையாகிய மத்தியானத்திலே செய்தல் உத்தமம்; மத்தியானத்துக்கு முன் ஒரு நாழிகையிலே செய்தல் மத்திமம்; மத்தியானத்துக்குப் பின் ஒரு நாழிகையிலே செய்தல் அதமம்.

262. சாயங்காலசந்தி எந்நேரத்திலே செய்தல் வேண்டும்?

சூரியன் பாதி அத்தமிக்கும்போது செய்தல் உத்தமம்; அத்தமயனமானபின் ஆகாசத்திலே நக்ஷத்திரங்கள் தோன்றுமுன் செய்தல் மத்திமம்; நக்ஷத்திரங்கள் தோன்றும்போது செய்தல் அதமம்.

263. சந்தியாவந்தனம் முதலிய கிரியைகளுக்கு ஆகாத நீர்கள் எவை?

நுரை குமிழி உள்ள நீர், புழு உள்ள நீர், வடித்து எடாத நீர், இழிகுலத்தார் தீண்டிய நீர், கலங்கல் நீர், பாசி நீர், உவர்நீர், வெந்நீர், பழநீர், சொறிநீர் என்பவைகளாம்.

போசனம்

264. போசனபந்திக்கு யோக்கியர் யாவர்?

சமசாதியாராயும், சிவதீக்ஷை பெற்றவராயும், நியமாசார முடையவராயும் உள்ளவர்.

265. போசனஞ் செய்தற்குரிய தானம் யாது?

வெளிச்சம் உடையதாய்ப், பந்திக்கு உரியரல்லாதவர் புகப் பெறாததாய்க் கோமயத்தினாலே மெழுகப் பட்டதாய் உள்ள சாலை.

266. போசனத்துக்கு உரிய பாத்திரங்கள் யாவை?

வாழையிலை, மாவிலை, புன்னையிலை, தாமரையிலை, இருப்பையிலை, பலாவிலை, சண்பகவிலை, வெட்பாலையிலை, பாதிரியிலை, பலாசிலை, சுரையிலை, கமுகமடல் என்பவைகளாம். வாழையிலையைத் தண்டுரியாது அதனுடைய அடி வலப் பக்கத்திலே பொருந்தும்படி போடல் வேண்டும். கல்லை தைக்குமிடத்துக், கலப்பின்றி ஒரு மரத்தினிலை கொண்டே ஒரு கல்லை முழுதுந் தைத்தல் வேண்டும். (கல்லை = இலைக் கலம்)

267. போசன பாத்திரங்களை எப்படி இடம் பண்ணிப் போடல் வேண்டும்?

போசன பாத்திரங்களைச் சலத்தினாலே செவ்வையாகக் கழுவி, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முழவளவை சதுரச் சிரமாகப் புள்ளியின்றி மெழுகி அததின் மேலே போடல் வேண்டும்.

268. இலை போட்டபின் யாது செய்தல் வேண்டும்?

அதிலே நெய்யினாலே புரோக்ஷித்து, லவணம், கறி, அன்னம், பருப்பு, நெய் இவைகளைப் படைத்தல் வேண்டும்.

269. போசனம் எப்படி பண்ணல் வேண்டும்?

இரண்டு கால்களையும் முடக்கி, இடமுழந்தாளின் மேலே இடக்கையை ஊன்றிக் கொண்டிருந்து, விதிப்படி அன்ன முதலியவற்றைச் சுத்தி செய்து, சிவபெருமானுக்கும் அக்கினிக்குங் குருவுக்கும் நிவேதனம் பண்ணி, அன்னத்திலே பிசையத்தக்க பாகத்தை வலக்கையினாலே வலப்பக்கத்திலே வேறாகப் பிரித்துப் பருப்பு நெய்யோடு பிசைந்து, சிந்தாமற் புசித்தல் வேண்டும்; அதன்பின் சிறிது பாகத்தை முன்போலப் பிரித்துப், புளிக்கறியோடாயினும் ரசத்தோடாயினும் பிசைந்து புசித்தல் வேண்டும். கறிகளை இடையிடையே தொட்டுக் கொள்ளல் வேண்டும். இலையினுங் கையிலும் பற்றறத் துடைத்துப் புசித்தபின், வெந்நீரேனுந் தண்ணீரேனும் பானம் பண்ணல் வேண்டும். உமிழத் தக்கதை, இலையின் முற்பக்கத்தை மிதத்தி, அதன்கீழ், உமிழ்தல் வேண்டும்.

270. போசனம் பண்ணும்பொழுது செய்யத்தகாத குற்றங்கள் எவை?

உண்பதற்கிடையிலே உப்பையும் நெய்யையும் படைத்துக் கொள்ளல், போசனத்துக்குப் உபயோகமாகாத வார்த்தை பேசுதல், சிரித்தல், நாய் பன்றி கோழி காகம் பருந்து கழுகு என்பவைகளையும், புலையர் ஈனர் அதீக்ஷதர் விரதபங்கமடைந்தவர் பூப்புடையவள் என்பவர்களையும் பார்த்தல் முதலியனவாம்.

271. புசிக்கும்போது அன்னத்திலே மயிர், ஈ, எறும்பு, கொசு முதலியன காணப்படின், யாது செய்தல் வேண்டும்?

அவைகளை சிறிதன்னத்தோடு புறத்தே நீக்கி விட்டுக், கை கழுவிக் கொண்டு, சலத்தினாலும், விபூதியினாலும் சுத்திப்பண்ணிப் புசித்தல் வேண்டும்.

272. போசனம் முடிந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?

எழுந்து, வீட்டுக்குப் புறத்தே போய்க், கை கழுவி விட்டுச், சலம் வாயிற்கொண்டு, பதினாறு தரம் இடப்புறத்திலே கொப்பளித்து, வாயையுங் கைகளையுங் கால்களையுங் கழுவி, ஆசமனம் பண்ணி, விபூதி தரித்தல் வேண்டும். அன்னமல்லாத பண்டங்கள் புசிக்கின், எட்டு தரங் கொப்பளித்து, ஆசமனம் பண்ணல் வேண்டும்.

273. உச்சிட்டதை எப்படி அகற்றல் வேண்டும்?

இலையை எடுத்து எறிந்து விட்டுக் கை கழுவிக் கொண்டு உச்சிட்டத் தானத்தைக் கோமயஞ் சேர்ந்த சலந் தெளித்து, இடையிலே கையையொடாமலும், முன்பு தீண்டிய விடத்தைப் பின்பு தீண்டாமலும், புள்ளியில்லாமலும் மெழுகிப், புறத்தே போய்க் கைகழுவிவிட்டுப் பின்னும் அந்தத் தானத்திலே சலந் தெளிந்து விடல் வேண்டும்.

274. போசனஞ் செய்தபின் வாக்குச் சுத்தியின் பொருட்டு யாது செய்தல் வேண்டும்?

இல்வாழ்வார் தாம்பூலம ஒரு தரம் மாத்திரம் புசிக்கலாம். துறவிகள் கிராம்பு, ஏலம், கடுக்காய், சுக்கு, வால்மிளகு என்பவைகளுள் இயன்ற தொன்றைப் புசித்தல் வேண்டும்.

275. இராத்திரியில் எத்தனை நாழிகையினுள்ளே புசித்தல் வேண்டும்?

எட்டு நாழிகையினுள்ளே புசித்தல் உத்தமம். பதினொரு நாழிகை யளவேல் மத்திமம்; பதினான்கு நாழிகை யளவேல் அதமம்; அதன் மேற் புசிக்கலாகாது.

276. போசன காலத்தில் விளக்கவியின் யாது செய்தல் வேண்டும்?

போசனம் பண்ணாது, அவ்வன்னத்தை வலக்கையினாலே மூடி, விளக்கேற்றி வருமளவும் ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை மானசமாகச் செபித்துக் கொண்டிருந்து, விளக்கேற்றியபின், பானையில் அன்னத்தை இடுவித்துக் கொள்ளாது, அவ்வன்னத்தையே புசித்துக் கொண்டு எழும்பல் வேண்டும்.

சயனம்

277. எப்படிச் சயனித்தல் வேண்டும்?

கிழக்கேயாயினும் மேற்கேயாயினுங் தெற்கேயாயினுந் தலை வைத்துச், சிவபெருமானைச் சிந்தித்துக் கொண்டு, வலக்கை மேலாகச் சயனித்தல் வேண்டும், வடக்கே தலை வைக்கலாகாது. வைகறையிலே நித்திரை விட்டெழுந்துவிடல் வேண்டும். சந்தியா காலத்தில் நித்திரை செய்தவன் அசுத்தன்; அவன் ஒரு கருமத்துக்கும் யோக்கியனாகான<>

கருவி



Source: http://www.facebook.com/notes/பன்னிரண்டு-திருமுறைகள்-தேவாரம்-திருவாசகம்-திருமந்திரம்/ஸ்ரீலஸ்ரீ-ஆறுமுக-நாவலரின்-சைவ-வினா-விடை-2/264629223447

திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம் திருநாவுக்கரசர் தேவாரம்

திருநாவுக்கரசர் தேவாரம்

(ஆறாம் திருமுறை)

திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
551 வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத் தொலியே போற்றி
ஆற்றாகி யங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி
காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

552பிச்சாடல் பேயோ டுகந்தாய் போற்றி
பிறவி யறுக்கும் பிரானே போற்றி
வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
பொய்ச்சார் புரமூன்று மெய்தாய் போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
கச்சாக நாக மசைத்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

553மருவார் புரமூன்று மெய்தாய் போற்றி
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி யென்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி யொளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி யோடு முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
6.55.3
554வானத்தார் போற்றும் மருந்தே போற்றி
வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஊனத்தை நீக்கு முடலே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
தேனத்தை வார்த்த தெளிவே போற்றி
தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி
கானத்தீ யாட லுகந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
6.55.4
555ஊராகி நின்ற உலகே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
பேராகி யெங்கும் பரந்தாய் போற்றி
பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி
நீராவி யான நிழலே போற்றி
நேர்வா ரொருவரையு மில்லாய் போற்றி
காராகி நின்ற முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

556சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி
தேவ ரறியாத தேவே போற்றி
புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி
பற்றி உலகை விடாதாய் போற்றி
கல்லுயிராய் நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

557பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவ மறுப்பாய் போற்றி
எண்ணு மெழுத்துஞ்சொல் லானாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

558இமையா துயிரா திருந்தாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
உமைபாக மாகத் தணைத்தாய் போற்றி
ஊழியே ழான ஒருவா போற்றி
அமையா அருநஞ்ச மார்ந்தாய் போற்றி
ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
கமையாகி நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

559மூவாய் பிறவாய் இறவாய் போற்றி
முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
தேவாதி தேவர்தொழுந் தேவே போற்றி
சென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றி
ஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி
அல்லல் நலிய அலந்தேன் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

560நெடிய விசும்போடு கண்ணே போற்றி
நீள அகல முடையாய் போற்றி
அடியும் முடியும் இகலி போற்றி
அங்கொன் றறியாமை நின்றாய் போற்றி
கொடிய வன்கூற்ற முதைத்தாய் போற்றி
கோயிலா என்சிந்தை கொண்டாய் போற்றி
கடிய உருமொடு மின்னே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

561உண்ணா துறங்கா திருந்தாய் போற்றி
ஓதாதே வேத முணர்ந்தாய் போற்றி
எண்ணா இலங்கைக்கோன் றன்னைப் போற்றி
இறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றி
பண்ணா ரிசையின்சொற் கேட்டாய் போற்றி
பண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றி
கண்ணா யுலகுக்கு நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

சிவபுராணம் திருவாசகம் Sivapuranam (Part of ‘Thiruvachakam’)

சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. 95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விபரித்துப் போற்றுகிறது. அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது. மிகவும் எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இப் பாடலின் பெரும்பாலான பகுதிகள், ஆயிரத்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டபின், தற்காலத்திலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியவையாக உள்ளன.


Sivapuranam is being part of the Saiva work ‘Thiruvachakam’, written by the Saiva Saint Manickavachakar who is believed to have lived during the end of 9th Century A.D. It needs no other explanation than the saying:

"thiruvAchakaththukku urukAdhAr oru vAchakaththukkum urukAr"

திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார்

(people who do not melt (with bhakthi) at hearing thiruvAchakam, will not be able to enjoy (melt) any other song(statement) )

Sivapuranam is forming first part of Thiruvachakam. The hymn, with its 95 lines (Kalivenba poetic format), draws a detailed account on the origin, appearance and characters of Lord Shivas, the primes deity of Saivites. Further the work explains that the soul is in association with an entity called Anava (anavam) from beginningless period. Anava is not ego and it is a malam (an impurity) associated with the soul . It is the source of all negative qualities like ignorance, ego etc,. Under its bondage, the soul was unable to know itself and the God above it. The all-merciful God, Lord Siva, wanted to free the soul from the grip of Anava. The text is simple and understandable to most of the Tamil speaking devotees.
Download Thiruvachakam in *.pdf format from http://www.shaivam.org/siddhanta/thivacha.html

Download Sivapuranam Mp3 from Download Thiruvachakam in *.pdf format from http://www.torrentb.com/results/index.asp?q=sivapuranam+mp3+free+download&pid=df5b7383-fda8-4afb-9148-456d26e2aefc

திருச்சிற்றம்பலம்


நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55

விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65

பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95


சிவ புராணம் 1 Sivapuranam 1

This is the eternally beautiful song Sivapuranam, from Thiruvasagam and sung by Dharmapuram swaminathan in his sublime voice.

Abhirami Ammai Pathikam – Set 3, By Abhirama Bhattar

Abhirami Ammai Pathikam – Set 3
(Poetic Prayer of Goddess Abhirami)
By Abhirama Bhattar


Abhirami Annai Pathikam Set – I is the poetic prayer. Abhirama Bhattar, who lived in Thirukadayur has written this poetic prayer. The poet has also written Abhirami Andathi, (http://know-your-mantras.blogspot.com/search/label/Abirami Andhathi ). Abhirama Bhattar has contributed three sets of prayers (pathigam) (Set 1, Set 2 and Set 3) addressed to Goddess Abhirami . All these three sets are available from the book Abhirami Bhattarain Pathigangal. Of the three sets, Set 1 is popular and especially the prayer song no. 1 is still more popular.


1. Kalam undu, Punal undu, poo undu,
Kanigal undu, kavumari nin thiru,
Kolam undu, ithai utkondu thondarai,
Koodi kondu kulaavi thirinthilen,
Jnaalam unda thirumalum, thevarum,
Nani oda naralayile ezhum,
Aalam unda Kadavur iraivarai,
AAlum chelvi, Abhirama valliye

2. THunjal yendru udan thondruthal yendrumay,
Chuzhalum vandu yena chuthi thirindha pin,
Minjal ondrayum kaanen, itharkku ini,
Mel yenakku oru mey vazhi kattuvay,
Unjal yendru azhagay akkodum pagadu,
Orum koottai udaithu Chiruvanai,
Anjal yendra Kadavur iraivarai,
Aalum chelvi, Abhirama valliye.

3. Umbalai kurumkar irumbu aagiyathu,
Ul udaikkum padi midi mer pada,
Pambu alaikkul schuzhal thurumbu aagi aap,
Patangil kudam kaviri paynthidum,
Kazhani thorum kadhir tharalangalai,
Ambu alaikkum Kadavur iraivarai,
Aalum chelvi, Abhirama valliye.

4. Mulai asaikum parathayar aasayil,
Moozhgi, moozhgi mudu vari ondhi pol,
Thalai asaikkum pathitharai pin chendru,
Sancharippathu konjamadho? Cholay,
Kulai asaikkum kurangu ilam thenginil,
Kudithu asaikka kudaval valai yerinthu,
Alai asaikkum kadavur iraivarai,
Aalum chelvi, Abhirama valliye.

5. Kandu araithu pizhindhadhu pol cholum,
Kaviyai chadum kaviyai oppu aagiya,
Vandar andayil kondu chollamal un,
Vanasa parvai vazhangil kurayumo ?
THondar pottha kalayanum pottha meych,
Churuthi potthu achuthan pottha, vsavan
Andar potthum Kadavur iraivarai,
Aalum chelvi, Abhirama valliye.

6. Thee tharikkum thamiyen, yen aaruyir,
Chjintha anthagan vandhidu mundhiye,
Nee tharikkum chilayoidu vandhu mun,
Nirpadhe andri, sarpanai cheyvayo?
Odharikkum vidhikkum yetta patham,
Udavi maindan mathi mayangamalum,
Aadarikkum Kadavur iraivarai,
Aalum Chelvi, Abhirama valliye.

7. Ozhivu ilatha kodum kama kumbhiyil,
Unarvu ilathu azhum oor pandri pola nan,
Izhivu ilathapadi, yel alavum nee,
Irangidathathum yetho"arinthilen,
Pozhivu ilathu appurantharan aagiyor,
Pondru kalathum pondrathu yekkalathum,
Azhivu ilatha Kadavur iraivarai,
Aalum Chelvi, Abhirama valliye.

8. Kandru arum thuyar theerkkum pasuvin nee,
Kannal villudan yen arugil vandhu,
Nindru arum thuyar neeki nandru aaki Ven,
Neeru aninthu ulam yeyrana matthuvay.
Pon tharum thuyal poon mulai marberap,
Porunthu nee yena ponthu bali irandhu,
Andru arunthum Kadavur iraivarai,
Aalum Chelvi, Abhirama valliye

9. Chalam kavarntha marai mukil aanathum,
Chanda marutham thakkiya pothu than,
Belam kulainthathu pole midiyinaal,
Pinju nenjakam pedakam aabvano?
Kalangal yendru vandhu aadaka choodaka,
Kai amarthi karunai vandhu aaluvay,
Alangal venik Kadavur iraivarai,
Aalum Chelvi, Abhirama valliye

10. Sokam nal kuravum thavirthu aalkenath,
Thol puvikku durandharan aadhiyor,
Yogam endrum utthu uthamiye, Pugazhndu,
Unnai potthum upayam arindhilen,
Bogam nalgum punar mulai marberap,
Pulli neengip porumayinal yenakku,
Aakam nalgum Kadavur iraivarai,
Aalum Chelvi, Abhirama valliye

Abhirami Ammai Pathikam – Set 2, By Abhirama Bhattar


Abhirami Ammai Pathikam – Set 2
(Poetic Prayer of Goddess Abhirami)
By Abhirama Bhattar



Abhirami Annai Pathikam Set – I is the poetic prayer. Abhirama Bhattar, who lived in Thirukadayur has written this poetic prayer. The poet has also written Abhirami Andathi, (http://know-your-mantras.blogspot.com/search/label/Abirami Andhathi ). Abhirama Bhattar has contributed three sets of prayers (pathigam) (Set 1, Set 2 and Set 3) addressed to Goddess Abhirami . All these three sets are available from the book Abhirami Bhattarain Pathigangal. Of the three sets, Set 1 is popular and especially the prayer song no. 1 is still more popular.

1. Thumbayum aninthavar viyakkum kala mathiyai nigar vadanavum,
Karunai pozhi vizhigalum vin mugilgal veliru yena kattiya karum koonthalum,
Sangai illadhu olirum mangalya tharanam thangum mani midarum mikka,
Chathur perugu pasangusam ilangu kara thalamum, viral nuniyum aravum,
Pungavarkku amudharulum mandhara kuchangalum poliyum nava mani noopuram,
Poonda chen chevadiyum ivvadeyeneen nidham pothi yena vazthha vidai mel,
Mangalam migundha nin pathiyinodum vandhu arul chey.
Valar thiru kadavooril vaazh, vaami, shubha nemi, pugazh nami, siva sami magizh vami, Abhirami, umaye.

2. Chandra jada dhari, Mukunda sodhari, thunga jalaja lochana, madhari,
Sambrama pauodhari, Sumangali, Sulakshani, Chatharum karuna kari,
Andhari, Varahi, Sambhavi, amalai, sura thothri, Aadhi jaga jala soothri,
Akhilatma karani, vinodasaya naarani, akanda chinmaya poorani,
Sundari, nirandhari, Durandhari, Parvatha raja sukumari, Koumari,
Uthunga kalyaniPushpasthra ambhuja pani, thondakkarul sarvani,
Vandhu ari malar Brahman aadhi thudhi veda oli,
Valar thiru kadavooril vaazh, vaami, shubha nemi, pugazh nami, siva sami magizh vami, Abhirami, umaye.

3. Vasa malar maruvu alaka baramum, than kirana mathi mukamum, ayil vizhigalum,
Vallar nigar mulayum, anna nadayum, nagai mozhigalum, valamudan kandu minnar,
Pasa bandhathuidai manam kalangi dinam pala vazhiyum yenni yenni,
Pazhi pavam innathendru ariyamal maya prapancha vaazhvu unmai yendre,
Aasai melittu veenaga nay pol thirindhu alaivathu allamal undran,
Ambuyappodhu yenum chempadam thudhiyadha asadan mel karunai varumo,
Masilathu Ongiya gunaakari, Bhavani, chher,
Valar thiru kadavooril vaazh, vaami, shubha nemi, pugazh nami, siva sami magizh vami, Abhirami, umaye.

4. Nandru yendru theethu yendru navilum ivvirandil mun navindrathe ulagil ullor,
Naduvar aadalaal adiyenum avvidham nadinen, nadinalum,
Indru yendru chollamal ninathu thiru ullam aathu irangi arul cheyguvayel,
Ezhayen uyguven, meyyana mozhi ikthu un idhayam ariyatyhathu undo?
Kundram yellam urainthu endrum anbarkku arul kumara devanai alitha,
Kumari, Margatha varuni, vimali, Bhiravi, karunai kulavu giri raja puthiri,
Mandral migu nandana vanamgal chirai ali murala,
Valar thiru kadavooril vaazh, vaami, shubha nemi, pugazh nami, siva sami magizh vami, Abhirami, umaye.

5. Oru naal, irandu naal all anal ulagathu udithu inda naal varikkum,
Ozhiyadha kavalayal theeradha innal kondu ullam thalarndhu migavum,
Arum nani athitta vil pol irukkum ivvadimai meedhir karunai koornthu,
Anjel, yena cholli aadarippavargal unai andri ver illai, unmai aaga,
Iru nazhi kai pozhudhum vendathu nimishathu ilakkam ili bhuvanathayum,
Iyathi arulum niram konda nee ezhayen innal theerthu arulal aritho?
Varum navaluraar mudhalor paravum iniya pugazh,
Valar thiru kadavooril vaazh, vaami, shubha nemi, pugazh nami, siva sami magizh vami, Abhirami, umaye.

6. Yennikkai illatha thunbangal men melum yerittu orukka antho,
Yevvidham ulam sakithu uyguven?Ippozhudu yeduthitta chanmam idhanil,
Nanni yel alavu sukham aanathu oru nalilulum naan anubavithathu illai,
Nadu yellam ariyum idhu ketpadhu yeen?Nin ulamum nandary arinthirujkum,
Punniyam poorba chanathinil cheyyatha pulayan aanaalum,
Poorana kadaksha veekshanniyam cheythu yenathu punmayai agathi arulvay,
Mannavargal, vinnavargal nithamum paravum isai,
Valar thiru kadavooril vaazh, vaami, shubha nemi, pugazh nami, siva sami magizh vami, Abhirami, umaye.

7. Therindho alaathu theriyamalo ivvadimai cheythitta pizhai irundhaal,
Chinam kondu adhu oor kanakkaga vaiyathu nin thiruvulam irangi migavum,
Parindhu vandhu iniyum naan paazh vinayil aazhndu innal padathu nal varam alithu,
Padhukathu arul cheyya vendum, andanda uyir parivudan alitha mudalvi,
Purandharan podhan Madhavan aadhiyorgal thudhi puriyum padaam buya malar,
Pungavi, , Purandhaki, Purandhari, Purathani, Purani, Tribhuvaneswari,
Marundhinum nayantha chor paingili, varahi yezhil,
Valar thiru kadavooril vaazh, vaami, shubha nemi, pugazh nami, siva sami magizh vami, Abhirami, umaye.

8. Vanchaka kodiyorgal natpu vendamalum, marundhinakka vendinum,
Maranthum oor poy mozhi chollamalum, theemayaam vazhiyil chellamalum,
Vinju nenju adanil poramai thariyamalum, veen vambu puriyamalum,
Mikka periyorgal cholum varthai thallamalum, veguli avai kollamalum,
Thanjam yena ninathu pada kanjam thuthithida, thamiyanukku arul purindhu,
Sarva kalamum yenai kathu arula vendum, salakkayalgal vizhiyai anaya,
Vanjiyar chevvai nigarum vani aam pal malarum,
Valar thiru kadavooril vaazh, vaami, shubha nemi, pugazh nami, siva sami magizh vami, Abhirami, umaye.

9. Yenathu innal innapadi yendru veru oruvarkku isaithidavum avargal kettu ivv-
Innal theerthu, ullathu irangi, nanmaigal cheyavum, yel alavum mudiyathu nin,
Unnatha maruvum kadai kannin arul chirithu cheyin udavatha nun manalgalum,
Oongu matthu uyar s ornana malai aagum athu andri uyar akila bhuvangalai,
Kanamudan alithu muppathi irandu aravum kavin pera cheyyum ninnai,
Karuthum nal adiyavarkku yeli vanthu thathiyinil kathu rakshithathu oornthu,
Vanasam nigar nin padam nambinen, vandhu arul chey,
Valar thiru kadavooril vaazh, vaami, shubha nemi, pugazh nami, siva sami magizh vami, Abhirami, umaye.

10. Karu neela vadivam aar madu yeri uddanda gana dhanda vempasamum,
Kaikondu Chanda maakaalan mun yedirkka Markandanum verundu nokki,
Aru neela kandan yenum nin pathiyai ullathil anbu kondu archanai cheya,
Aranum avv ilangam pilappa ninnodu thondri, avir chey soolathil oondri,
Peru neela malai yena nilathil annavan vizha pirangu thaalal udaithu,
Pesum muni maindanukku arul cheythathu unadhu ariya per arulin vannam allavo?
Varu neela mada mathar vizhi yenna malar vaavi,
Valar thiru kadavooril vaazh, vaami, shubha nemi, pugazh nami, siva sami magizh vami, Abhirami, umaye.

11. Sakala chelvangalum tharum imaya giri raja thanayai, maadevi, ninnai,
Sathyamay nithyam ullathil thudhikkum uthamarukku irangi migavum,
Akilam athil noy inmai, kalvi, Dhana dhaniyam, mey, azhagu, pugazh, perumai, ilamai,
Arivu, santhanam, vali, thunivu vaznaal vethi aagum nal oozh nugarchi,
Thogai tharum pathinaru perum nee thanthu arul sukhananda vazhvu alippay,
Sugirtha guna Sali, paripali, anukoli, thiri soli, Mangala visali,
Magavu naan, Nee thay, alikonaatho?magimai
Valar thiru kadavooril vaazh, vaami, shubha nemi, pugazh nami, siva sami magizh vami, Abhirami, umaye.

Abhirami Ammai Pathikam – Set I By Abhirama Bhattar


Abhirami Ammai Pathikam – Set I
(Poetic Prayer of Goddess Abhirami)
By Abhirama Bhattar



Abhirami Annai Pathikam Set – I is the poetic prayer. Abhirama Bhattar, who lived in Thirukadayur has written this poetic prayer. The poet has also written Abhirami Andathi, (http://know-your-mantras.blogspot.com/search/label/Abirami Andhathi ). Abhirama Bhattar has contributed three sets of prayers (pathigam) (Set 1, Set 2 and Set 3) addressed to Goddess Abhirami . All these three sets are available from the book Abhirami Bhattarain Pathigangal. Of the three sets, Set 1 is popular and especially the prayer song no. 1 is still more popular.

Kaapu

Thooya thamizh paamalai chootutharkku mummadhan nal,
Vay iyngaran thal vazhuthuvam - neyam nitham,
Ennum pugazh Kadavur yengal Abhiramavalli,
Nannum por pathaithil nanku.


1. Kalayatha kalviyum kurayatha vayathum, Or kapadu varatha natpum,
Kanratha valamayum, kunratha ilamayum, kazhu pini illatha udalum,
Chaliyatha manamum, anbakalatha manaiviyum, thavaratha santhanamum,
Thazhatha keerthiyum, maratha varthayum, thadaigal varatha kodayum,
Tholayatha nithiyamum, konatha kolum, oru thunpamillatha vazhvum,
Thuyya nin padathil anbum udavi periya thondarodukootu kanday,
Alaiyazhi ari thyilum mayanathu thangaye, aadhi kadavoorin vazhve,
Amudheesar oru bagam akalatha sukha pani, arulvami abhirami.

2. Karalaka panthiyum, panthiyin alangalum, kariya puruva chilaigalum,
Karna kundalumum, mathi mukha mandalam nudhar kathoori pottum ittu,
Koor aninthidu vizhiyum, Amutha mozhiyum, chiriya kovvayin kani adaramum,
Kumizh anaya nasiyum, kunda nigar danthavum, kodu sodana kalamum,
Vaar aninthu irumantha vana mulayum, mekalayum, mani noopura padamum,
Vandhu yenadhu mun nindru mandahasamummaga val vinayai mathuvaye,
Aaramani vanilurai tharagaigal pola nirai Aadhi kadavurin vazhve,
Amudheesar oru bagam agaladha shukapani, arulvami Abhiramiye.

3. Makara vaar kuzhai mel adarnthu kumizh meedinil, marainthu vaalai thurathi.
Maikayali vendra nin chengamala vizhiyarul varam petha pergal andro?
Jega m uzhudum othai thani kudai kavithu mel singadanathil uththu,
Chengolum manu needhi muraimayum pethu migu thigiri ulagu aandu pinbu,
Pugarmugathu Iravadha pagan aagi nirai puthelir vandhu pothi,
Poga devendran yena pugazha vinnilpulomasaiyodum sugippar,
Agara mudal aagi valar Aananda roopiye, Aadhi kadavurin vazhve,
Amudheesar oru bagam agaladha shukapani, arulvami Abhiramiye.

4. Marikadalgal ezhayum thigiri iru nangayum, madira kari ettayum,
Maanagam aanathayum mameru anathayum maakoormam aanathayum oor,
Pori aravu thangi varu puvanam eer ezhayum puthelir kootathayum,
Poomaganayum thigiri mayanayum arayinir puli aadai udayanayum,
Murai muraigalay eendra muthiyalay pazhamai thalai muraigal theriyatha ninnai,
Mooulagil ullavargal valai yendry ariyamal mozhigindrathu yethu cholvay,
Arivudaya per manathu aananda variye, Aadhi kadavurin vazhve,
Amudheesar oru bagam agaladha shukapani, arulvami Abhiramiye.

5. Vadamal uyir yennum payir thazhaithu ongi vara, arul mazhai pozhindum inba,
Varidhiyile ninnathu anbenum chiragal varundhamale anaithu,
Kodaamal valar kunjaram thottu yerumbu kadai konda karu aana cheeva,
Kodigal thamakkum pusikkum pusippinai kurayamale kodthu,
Needazhi ulagangal yavayum thiru undhi nettu thanile tharikkum,
Ninnai akhilagalukku annai yendru othamal Neeli yendru othuvaaro,
Aadaya nan marayin velviyal ongu pugazh, Aadhi kadavurin vazhve,
Amudheesar oru bagam agaladha shukapani, arulvami Abhiramiye

6. Pal kunjaram thottu yerumbu kadai aanathu oru pal uyirkkum kal idaip,
Patta theraikkum andru urbavithidu garbham thannil jevanukkum,
Malgum charachara porulukkum, imayatha vannavar kuzhathinukkum.
Mathum oru moovarkkum, yavarkkumavaravar mana chalippu illamale,
Nalgum thozhir perumai unday irundum miga nava nidhi unakku irundum,
Naan oruvan varumayal chiriyan aanaal annagaippu unakke allavo?
Alkalanthu umbarnadualavedukkum cholai, , Aadhi kadavurin vazhve,
Amudheesar oru bagam agaladha shukapani, arulvami Abhiramiye

7. Needum ulangalkku aadaramay nindru, nithamum moorthi vadivay,
Niyamamudan muppathi irandu aaram valakkukindra nee manaiviyay irundum,
Veedu veedugal thorum odi pugundhu kal veasathu ilachaiyum poi,
Ven thugil araikkaniya vidhiyathu nirvana vedamum kondu kaikor,
Odu endhi nadengum ulam thalanthu nindru unmathan aagi amma,
Un kanavan yengegum iyam pugundhu yengi uzhalgirathu yethu cheyvay?
Aadu kodi mada visdai madar vilayadi varum, Aadhi kadavurin vazhve,
Amudheesar oru bagam agaladha shukapani, arulvami Abhiramiye

8. Jnanam thazhaithu un sorupathai arikindra nallor idathil poy,
Naduvinil irundu uvandhu adimayum poondu avar navithum
Upadesam ut kondu,
Yeenam thanai thalli yenathu naan yenum manamillale thurathi,
Indiriya vayilgali iruga pudaithu nenju irul ara vilakku yethiye,
Vaan andham aana vizhi anname unnai yen mana thamarai pothile,
Vaithu vere kavalai athu mel utha paravasamagi azhiyadhathu oor
Ananda varidhiyil aazhkindrathu yendru kan, Aadhi kadavurin vazhve,
Amudheesar oru bagam agaladha shukapani, arulvami Abhiramiye.

9. Chalathi ulagathir characharangalai yeendra thayaginaal yenakku,
Thayallavo? Yaan un maindan andro? Yenathu chanchalam theerthu ninran,
Mulai churanthu ozhugu pal ooti, yen mugathinai un mundanayal thudaithu,
Mozhigindra mazhalaikku ugandhu konduila nilaa muruvalum pothu arugil yaan,
Kulavi vilayadal kandu, arul mazhai pozhindu angai kotti "vaa" yendru azhaithu,
Kunjaramukhan kumaranukku ilayavan yendru yennai koorinaal yeenam undo?
Alai kadalile thondrom aaratha amuthe, Aadhi kadavurin vazhve,
Amudheesar oru bagam agaladha shukapani, arulvami Abhiramiye.

10. Kaippothu kondu un pathappothu thannir kanappothum archikkilen,
Kan pothinaal un mukappothu thannai yaan kandu darisanai purigilen,
Muppothil oru pothum yen mana pothole munni un aalayathim,
Munpothuvaar thamaathu pin potha ninaik, ilen, mosame podugindren,
Maipodakathirkku nigar yena pothum yerumai kada misaim yeriye,
Magora kalan varum pothu thamiyen manam kalangi thiyangum,
Appothu vandhu unathu arut pothu thandarulga, Aadhi kadavurin vazhve,
Amudheesar oru bagam agaladha shukapani, arulvami Abhiramiye.

11. Migayum thuratha vempiniyum thuratha mada veguli melum thuratha,
Midiyum thuratha narai thirayum thuratha, nani vedanaigalum thuratha,
Pagayum thuratha, vanchanayum thurathas, muppasi yenpadum thuratha,
Pavam thburatha, ad hi mogam thuratha, mala bhava karyamum thuratha,
Nakaiyum thuratha, oozh vinayum thuratha, muzhu nanum thuratha, veguvai,
Navaradrodi irukal thalarnthidum yennai, namanum thurathuvano?
Akila ulagangalukkum aadarame koorum, Aadhi kadavurin vazhve,
Amudheesar oru bagam agaladha shukapani, arulvami Abhiramiye.


கலையாத கல்வியும் kalaiyaatha kalviyum

காமாக்ஷி துக்க நிவாரண அஷ்டகம் Kamakshi Dhukka Nivarana Ashtakam


Kamakshi Dhukka Nivarana Ashtakam
(Kamakshi Ashtakam for Relieving Sorrow and Hurdles)

'Mangala roopini'is a devotional tamil song popularly called 'Dhukka nivarana ashtakam', in praise of Goddess Kamakshi. It's good to recite this sloka daily at home to get the blessings of Goddess Kamakshi, and therby attain a happy life. 'Dukka Nivarana' means remove all types of worries and give a peace of mind.


Mangala roopini madhiyani soolini manmadha paaniyale,
Sangadam neengida saduthiyil vandhidum shankari soundariye,
Kangana paaniyan kanimugam kanda nal karpaga kaminiye,
Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi.

Kaanuru malarena kadhiroli kaatti kaathida vandhiduvaal,
Thaanuru thavaoli thaaroli madhioli thaangiye veesiduvaal,
Maanuru vizhizhaal maadhavar mozhizhaal maalaigal soodiduvaal,
Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi.

Shankari soundari chaturmukan potrida sabayinil vandhavale,
Pongari maavinil ponn adi vaithu porindhida vandhavale,
Yenkulam thazhaithida ezhil vadivudane ezhunthanal durgayale,
Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi.

Dhanadhana dhann dhana thaviloli muzhangida thanmani nee varuvaay,
Gangana gan gana kadhiroli veesida kannmani nee varuvaay,
Banbana bam bana parai oli koovida pannmani nee varuvaay,
Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi.

Panchami bhairavi parvatha puthri panchanal paaniyale,
Konjidum kumaranai gunamigu vezhanai koduththanal kumariyale,
Sangadam theerthida samaradhu seythanal shakthi enum maaye,
Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi.

Enniyapadi nee arulida varuvaay en kula deviyale,
Panniya seyalin palan adhu nalamaay palgida aruliduvaay,
Kannoli adhanaal karunayai kaatti kavalaigal theerpavale,
Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi.

Idar tharum thollai inimel illai endru nee solliduvaay,
Sudar tharum amudhe sruthigal koori sugam adhu thandhiduvaay,
Padar tharum irulil paridhiyaay vandhu pazhavinay ottiduvaay,
Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi.

Jeya jeya bala chamundeshwari jeya jeya sridevi,
Jeya jeya durga sriparameshwari jeya jeya sridevi,
Jeya jeya jayanthi mangalakaali jeya jeya sridevi,
Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi.


ஸ்ரீ துக்க நிவாரன அஷ்டகம்

மங்கள ரூபினி மதியனி சூலினி மன்மத பானியளெ,

சங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும் ஷங்கரி சௌந்தரியெ,

கங்கன பானியன் கனிமுகம் கண்ட நல் கற்பக காமினியெ,

ஜெய ஜெய ஷங்கரி கௌரி க்ரிபாகரி துக்க நிவாரனி காமாக்ஷி.


கானுரு மலரென கதிரொலி காட்டி காத்திட வந்திடுவாள்,

தானுரு தவஒலி தாரொலி மதியோலி தாங்கியே வீசிடுவாள்,

மானுரு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்,

ஜெய ஜெய ஷங்கரி கௌரி க்ரிபாகரி துக்க நிவாரனி காமாக்ஷி.


ஷங்கரி சௌந்தரி சதுர்முகன் பொற்றிட சபையினில் வந்தவளெ,

பொங்கரி மாவினில் பொன் அடி வைத்து பொரிந்திட வந்தவளெ,

என் குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்தனல் துர்கையளெ,

ஜெய ஜெய ஷங்கரி கௌரி க்ரிபாகரி துக்க நிவாரனி காமாக்ஷி.


தனதன தன் தன தவிலொலி முழங்கிட தன்மணி நீ வருவாய்,

கங்கன கன் கன கதிரொலி வீசிட கண்மணி நீ வருவாய்,

பன்பன பம் பன பரை ஒலி கூவிட பண்மணி நீ வருவாய்,

ஜெய ஜெய ஷங்கரி கௌரி க்ரிபாகரி துக்க நிவாரனி காமாக்ஷி.


பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சனல் பானியளே,

கொஞ்சிடும் குமரனை குனமிகு வேழனை கொடுத்தனல் குமரியளெ,

சங்கடம் தீர்திட சமரது செய்தனல் சக்தி எனும் மாயே,

ஜெய ஜெய ஷங்கரி கௌரி க்ரிபாகரி துக்க நிவாரனி காமாக்ஷி.


என்னியபடி நீ அருளிட வருவாய் என் குல தேவியளெ,

பன்னிய செயலின் பலன் அது நலமாய் பல்கிட அருளிடுவாய்,

கன்னொலி அதனால் கருனையை காட்டி கவலைகள் தீர்பவளெ,

ஜெய ஜெய ஷங்கரி கௌரி க்ரிபாகரி துக்க நிவாரனி காமாக்ஷி.


இடர் தரும் தொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்,

சுடர் தரும் அமுதே ஸ்ருதிகள் கூறி சுகம் அது தந்திடுவாய்,

படர் தரும் இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்,

ஜெய ஜெய ஷங்கரி கௌரி க்ரிபாகரி துக்க நிவாரனி காமாக்ஷி.


ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி,

ஜெய ஜெய துர்கா ஸ்ரீபரமெஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி,

ஜெய ஜெய ஜெயந்தி மங்கலகாளி ஜெய ஜெய ஸ்ரீதேவி,

ஜெய ஜெய ஷங்கரி கௌரி க்ரிபாகரி துக்க நிவாரனி காமாக்ஷி.



Mangalaroopini- tamil devotional song YouTube